புதுக்கோட்டை மாவட்டம் எருக்கம்பட்டி, ராப்புசல் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் வயது 39 திருச்சியில் உள்ள தனது உறவினரை சந்தித்து விட்டு மீண்டும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு செல்வதற்காக திருச்சி மத்திய பேருந்து நிலையம் புதுக்கோட்டை பேருந்துகள் நிற்கும் இடத்தில் பேருந்துக்காக காத்திருந்தார்.

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த கருமண்டபம் பகுதியை சேர்ந்த கார்த்திகா, துவாக்குடியை சேர்ந்த வெண்ணிலா மற்றும் ரேஷ்மா ஆகிய மூன்று திருநங்கைகளும் ஆறுமுகத்திடம் தகராறில் ஈடுபட்டு கெட்ட வார்த்தையால் திட்டி கையால் அவரை தாக்கி அவரிடம் இருந்த ரூபாய் 19 ஆயிரத்தை பறித்து விட்டு அங்கிருந்து சென்றனர். இது குறித்து ஆறுமுகம் கண்டோன்மென்ட் காவல் நிலைய ஆய்வாளர் சிவக்குமாரிடம் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று திருநங்கைகள் குறித்து விசாரணை நடத்தி இரண்டு திருநங்கைகளை கைது செய்து சிறையில் அடைத்தார். மேலும் தலைமறைவான திருநங்கை ரேஷ்மாவை போலீசார் தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *