திருச்சி கொட்டப்பட்டு எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் சின்ராஜ் வயது (24) இவர் கடந்த 15ஆம் தேதி பொன்மலைப்பட்டி கடைவீதியில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுசம்பந்தமாக மறுநாள் 16ஆம் தேதி கொலை செய்யப்பட்ட சின்ராஜின் நண்பர்கள் சார்பில் பொன்மலை, பொன்மலைப்பட்டி, கல்கண்டார்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கண்ணீர் அஞ்சலி போஸ்ட் ஒட்ட்ப்பட்டது. அதில் இன்று இறுதி ஊர்வலம் மாலை 4 அவர்களது இல்லத்தில் இருந்து புறப்படும் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம் இந்த வாசகத்தின் கடைசியாக விரைவில்….  என்ற வார்த்தை அச்சிடப்பட்டிருந்தது. இந்த விரைவில்….  என்ற வார்த்தை பழிக்கு பழி என்ற வாசகமாக கருதப்பட்டது.

இந்தப் போஸ்டரை படித்த மண்ணச்சநல்லூரை சேர்ந்த சார்லஸ் (46) என்பவர் பொன்மலைப்பட்டியில் செல்போன் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார். இந்த வாசகத்தைக் குறித்து இது மாதிரி வாசகம் அச்சடிக்கப்பட்ட போஸ்டரை ஒட்டி இருக்கிறீர்களே பிரச்சனை எதுவும் வராதா என்று போஸ்டர் ஒட்டிய நபர்களான இறந்த சின்ராஜின் அண்ணன் கொட்டப்பட்டு ஜே.ஜே நகரை சேர்ந்த ரமேஷ் (26), பொன்மலைப்பட்டி அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த ஜோஸ்வா (20), இவரது அண்ணன் டார்வின் (23), சுப்ரமணியபுரம் ஜெய்லானியா தெருவை சேர்ந்த நந்தா (23), கல்லுக்குழி முடுக்குபட்டி பகுதியை சேர்ந்த மணிகண்டன் (23) ஆகியோரிடம் கேட்டுள்ளார். இதனால் அவர்கள் 5 பேரும் சேர்ந்து சார்லசை மிரட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து சார்லஸ் பொன்மலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து ரமேஷ், ஜோஸ்வா, டார்வின் நந்தா, மணிகண்டன் ஆகிய 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தக் கொலை வழக்கில் நேற்று முன்தினம் சின்ராஜ் கொலை செய்த 3 பேரை பொன்மலை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்