மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், விவசாய விளைப் பொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தர வேண்டும், மழையினால் அழிந்து வரும் 10 இலட்சம் நெல் மூட்டைகளை அரசு உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும்,

உத்திர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம் திகுன்னியா அருகில் பன்வீர்பூர்-ரில் விவசாயிகளை கொன்றவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் திருச்சியில் கடந்த 12.10.2021 முதல் 26.11.2021 வரை 46 நாட்கள் நூதன முறையில் உண்ணாவிரத போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக இன்று காலை 6-ம் நாளான இன்று விவசாயிகள் உண்ண உணவின்றி வயலில் கிடைக்கும் எலிகளை உண்பது போலவும், இறந்து போனது போன்று விவசாயி ஒருவருக்கு பாடை கட்டி நூதன உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினர். திடீரென விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் சாலை நோக்கி நடந்து சென்றனர்.

அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் பேரிகார்டு கொண்டு விவசாயிகளை தடுத்து நிறுத்தினர். மேலும் அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் மீண்டும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *