மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், விவசாய விளைப்பொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தர வேண்டும், மழையினால் அழிந்து வரும் 10 இலட்சம் நெல் மூட்டைகளை அரசு உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும், உத்திர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம் திகுன்னியா அருகில் பன்வீர்பூர்-ரில் விவசாயிகளை கொன்றவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், மாநில துணைத்தலைவர்கள் கரூர் தட்சிணாமூர்த்தி, மேகராஜன், பரமசிவம், மாநில செயலாளர் நகர் ஜான் மெல்கியோராஜ் மற்றும் மாநில செய்தி தொடர்பாளர் பிரேம்குமார் ஆகியோர் கலந்துகொண்டு திருச்சியில் கடந்த 12.10.2021 முதல் 26.11.2021 வரை 46 நாட்கள் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் 12ம் நாளான இன்று மத்திய மோடி அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்காமல் விவசாய விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தருகிறேன் என்று கூறிவிட்டு, அவ்வாறு தராமல் விவசாயிகளின் வாயில் நிப்பிள் வைத்து ஏமாற்றிவிட்டார் என்பதை சுட்டிக்காட்டி நூதன உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *