மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், விவசாய விளைப் பொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தர வேண்டும், மழையினால் அழிந்து வரும் 10 இலட்சம் நெல் மூட்டைகளை அரசு உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும், உத்திர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம் திகுன்னியா அருகில் பன்வீர்பூர்-ரில் விவசாயிகளை கொன்றவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில்

விவசாயிகள் திருச்சியில் கடந்த 12.10.2021 முதல் 26.11.2021 வரை 46 நாட்கள் பல்வேறு கட்ட நூதன உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது அதன் ஒரு பகுதியாக 20ம் நாளான இன்று மத்திய மோடி அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்காமல் விவசாய விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தருகிறேன் என்று கூறிவிட்டு, அவ்வாறு தராமலும், இந்தியாவின் முதுகெலும்பு விவசாயிகள் என்று கூறிவிட்டு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்காமல் அவர்களின் முதுகெலும்பை உடைத்துவிட்டார் என்பதை சுட்டிக்காட்டி விவசாயிகள் நூதன உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *