மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், விவசாய விளைப்பொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தர வேண்டும், மழையினால் அழிந்து வரும் 10 இலட்சம் நெல் மூட்டைகளை அரசு உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும், உத்திர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம் திகுன்னியா அருகில் பன்வீர்பூர்-ரில் விவசாயிகளை கொன்றவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் திருச்சியில் கடந்த 12.10.2021 முதல் 26.11.2021 வரை 46 நாட்கள் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக 28ம் நாளான இன்று மத்திய மோடி அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்காமல், விவசாய விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தருவதாக கூறிவிட்டு மோடி ஐயா தராததால், விவசாயிகள் மரத்தின் கிளையில் ஏறி அமர்ந்து, கோஷமிட்டு நூதன உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பெரியசாமி – தெற்கு சிறுப்பதூர். சுபையா – கோலார்பட்டி, பெரியசாமி – கோட்டத்தூர், பொன்னுசாமி – வாழையூர், பாஸ்ட்டின் கென்னடி – அரியமங்கலம், பெருமாள் – வாழையூர், கக்கரை, தெய்வானை – ஒட்டக்குடி, குழந்தை சேசுராஜ்(துரை) – கோலார்பட்டி, சூசையம்மாள் – கோலார்பட்டி, பெரியம்மாள் – கோலார்பட்டி, மருதை – கீழகன்னுக்குளம், காத்தான் – அழிஞ்சிக்கரை, சிவா – மூவராயம்பாளையம், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் மாநில செய்தி தொடர்பாளர் பிரேம்குமார் ஆகியோர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்