சர்வதேச திருச்சி விமான நிலையத்திற்கு பல்வேறு நாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் வரும் ஒருசில பயணிகள் தொடர்ந்து தங்கம் கடத்தி வருவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு கோலாலம்பூரில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாிகள் சோதனை செய்தனர்.

அப்போது பயணி ஒருவர் கொண்டு வந்த வீடியோ கேம் மின்சாதனத்தில் இருந்து 517 கிராம் எடை கொண்ட 34.25 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதே போல துபாயிலிருந்து வந்த பயணி ஒருவரிடம் இருந்து 526 கிராம் எடை கொண்ட 34.72 மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக இரு ஆண் பயணிகளிடம் வான் நுண்ணறிவு பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *