திருச்சி ஆழ்வார்தோப்பு பகுதியில் வசித்து வருபவர் நஜிமா பேகம் வயது 75 இவரது கணவர் அப்துல்மாலிக் நேவி ஆபீஸராக பணிபுரிந்து இறந்துவிட்டார்.இவர்களுக்கு 3 மகன்கள் ஒரு மகள் இரண்டு மகன்கள் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றனர். ஒரு மகன் கல்கத்தாவில் ஆர்மி ஆபிஸராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பாக ராமலிங்க நகர் பகுதியில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்ற நசீமா பேகம் அங்கு தங்கி உள்ளார். இந்நிலையில் இன்று மதியம் நசீமா பேகத்திற்கு போன் மூலம் உங்கள் வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டு இருப்பதாக அருகே குடியிருப்பவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
![](https://tamilmuzhakkam.com/wp-content/uploads/2021/06/IMG_20210602_194617_50.jpg)
![](https://tamilmuzhakkam.com/wp-content/uploads/2021/06/IMG_20210602_194639_50.jpg)
![](https://tamilmuzhakkam.com/wp-content/uploads/2021/06/IMG_20210602_194626_50.jpg)
![](https://tamilmuzhakkam.com/wp-content/uploads/2021/06/IMG_20210602_194655_50-1024x873.jpg)
![](https://tamilmuzhakkam.com/wp-content/uploads/2021/06/Photo_1622643973308_50.jpg)
மேலும் காவல் துறையை சேர்ந்த மோப்ப நாய் பென்னி வரவழைக்கப்பட்டு கொள்ளை நடந்த வீட்டில் இருந்து பழைய மதுரை ரோடு வரை சென்று திரும்பியது இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.