திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள எரகுடி கிராமத்தை சேர்ந்த விவசாயி சங்கர் இவரது மகன் அருண் பாண்டியன் BE பொறியியல் பட்டம் பெற்றுள்ளார். இந்நிலையில் அரசு வேலைக்காக பட்டதாரி வாலிபர் முயற்சி செய்வதை அறிந்த முசிறியை சேர்ந்த அரசு பஸ் போக்குவரத்து துறையில் பணி புரியும் கண்டெக்டர் அன்பழகன், BE பட்டதாரியான அருண்பாண்டியனிடம் மின்சார வாரியத்தில் JE பதவி வாங்கித் தருவதாக கூறி ரூபாய் 1 லட்சத்து 65 ஆயிரம் பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றியதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து பட்டதாரி வாலிபர் அருண்பாண்டியன் உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் விதுன்குமார் அன்பழகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *