திருச்சி ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதேசி பெருந்திருவிழா தோன்றுவதற்கு முன்பாகவே கொண்டாடப்பட்டு வந்த பிரசித்திப்பெற்ற தைத்தேர் விழாவிற்கான முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. வருகிற 09.01.2022 தேதி அன்று தைத் தேர்( பூபதி திருநாள்) திருவிழா துவங்குகிறது – புனர் பூச நட்சத்திரத்தில் ஓடும் தைதேரோட்டம் வரும் 17.01.2022 அன்று நடைபெற உள்ளது. ராமர் பிறந்த நட்சத்திரமான புனர்பூசம் நட்சத்திரத்தில் இந்த திருத்தேரோட்டம் பன்னெடுங்காலமாக நடைபெற்று வருகிறது. தைத் தேர் திருவிழா மிக விரைவாக வருவதன் காரணமாக இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதேசி பெருவிழாவை மார்கழியில் நடத்தாமல் கார்த்திகை மாதத்திலேயே ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகம் நடத்தியது – ஸ்ரீரங்கம் ஆலயத்தின் பிரசித்திபெற்ற திருவிழாவான வைகுண்ட ஏகாதேசி பெருந்திருவிழா, அதைவிட பூபதி திருநாள் என்று அழைக்கப்படும் தை தேரோட்டம் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. கோவில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *