ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில்: இன்று மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு கோயில் இணை ஆணையர் மாரிமுத்து , தக்காரும் திருச்சி , பெரம்பலூர் மாவட்டங்களின் மண்டல இணை ஆணையரும்மான அரங்க.சுதர்சன் , திருவானைக் கோயில் உதவி ஆணையர் மாரியப்பன், மேலாளர் உமா ஆகியோரின் முன்னிலையில் பக்தர்கள் வழங்கிய காணிக்கைகள் எண்ணப்பட்டது,

இதில் ரொக்கம் ரூபாய் 28,83705 , தங்கம் 62 கிராமும் , வெள்ளி 34 கிலோ 278 கிராமும் (34278 கிராம்), வெளிநாட்டு ரூபாய் தாள்கள் 48-ம் எண்ணப்பட்டது. குறிப்பாக வெள்ளியின் அளவான 34 கிலோ 278‌ கிராம் மாதாந்திர உண்டியல் எண்ணிக்கையில் கிடைக்கப்பெற்ற அதிகபட்ச்ச அளவாகும். உண்டியல் எண்ணும் பணியில் கோயில் பணியார்கள் மற்றும் தன்னார்வ தொண்டு பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *