திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயில் உள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் வழங்கிய காணிக்கைகள் ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில், உதவி ஆணையர்கள் கந்தசாமி மாரியப்பன் ஆகியோரின் மேற்பார்வையில் இன்று எண்ணப்பட்டது.

உண்டியலில் பக்தர்கள் வழங்கிய ரூபாய் 8703958 லட்சமும், தங்கம் 153 கிராமும், வெள்ளி 1870 கிராமும் மற்றும் வெளிநாட்டு பணம் 58 நோட்டுகள் இருந்தது. உண்டியல் எண்ணும் பணியில் கோயில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்