108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும்,பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று காலை 11:30 வருகை தந்தார்.

கோவிலில் உள்ள சக்கரத்தாழ்வார் சன்னதி,ராமானுஜர் சன்னதி,தாயார் சன்னதி மற்றும் ரங்கநாதர் சன்னதியில் சென்று சாமி தரிசனம் செய்தார்.கோவில் பட்டர்கள் அவருக்கு பிரசாதம் வழங்கினர். அவருடன் திருச்சி மாவட்ட பாஜக தலைவர் ராஜசேகரன் மற்றும் பாஜக தொண்டர்கள் உடனிருந்தனர். கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் பாஜக தலைவர் அண்ணாமலையுடன் தங்களது செல்போனில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *