ஸ்ரீரங்கம் தலைமை தபால் நிலையம் சார்பில் ஸ்ரீரங்கம் டாக்டர் ராஜன் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆதார் கார்டில் பெயர் மாற்றம் பெயர் திருத்தம் முகவரி மாற்றம் அலைபேசி எண் மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களுக்கு சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகம் 17ஆம் தேதி தொடங்கி 22 ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது முதல் மூன்று நாட்கள் தனியார் பள்ளி மற்றும் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஆதார் கார்டு திருத்த முகாமும் அதனைத் தொடர்ந்து வியாழன் வெள்ளி சனி ஆகிய மூன்று நாட்கள் பொது மக்களுக்கான ஆதார் கார்டு திருத்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இந்த முகாமிற்காண ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் டாக்டர் ராஜன் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் லில்லி ப்ளோரா செய்திருந்தார். மேலும் அஞ்சல் சிறுசேமிப்பு திட்டத்தின் கீழ் செல்வமகள் சேமிப்பு திட்டம் மற்றும் வருங்கால வைப்பு நிதி சிறுசேமிப்பு திட்டத்திற்கான முகவும் நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *