ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் யானைகளான ஆண்டாள் மற்றும் லட்சுமி குளிப்பதற்காக ஸ்ரீரங்கம் வடக்கு வாசல் பஞ்சக்கரை சாலையில் உள்ள ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சொந்தமான

“உடையவர் தோப்பில்” 56அடி நீளமும் 56 அடி அகலமும் , 6.5 அடி உயரம் கொண்ட புதிய நீச்சல் குளம் கட்டப்பட்டுள்ளது. இதில் 3 லட்சம் லிட்டர் தண்ணீர் கொள்ளவு கொண்டது.

அந்த குளத்திற்க்கு இன்று காலை கோயில் அர்ச்சகர் சுந்தர் பட்டர் சிறப்பு பூஜை செய்யப்பட்ட பின்பு கோயில் இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில் ஆண்டாள் மற்றும் லட்சுமி ஆகிய இரண்டு யானைகளும் முதன் முறையாக அந்த நீச்சல் குளத்தில் குளிக்க வைத்து பார்க்கப்பட்டது , இதில் உதவி ஆணையர் கந்தசாமி , உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருககன் , மேலாளர் உமா ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *