108 திவ்யதேசங்களில் முதன்மையானதும் பூலோகம் வைகுண்டம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவிலின் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த சனிக்கிழமை முதல் திருநெடுந்தாண்டகத்துடன் துவங்கியது. பகல் பத்து ராப்பத்து என 21 நாட்கள் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் வைகுந்த ஏகாதசி பகல் பத்து 8- ம் நாளான இன்று ஸ்ரீ நம்பெருமாள் முத்து கிரீடம் , இரத்தின அபயஹஸ்தம் , அடுக்கு பதக்கம் , இரத்தின மகர ஹண்டிகை ,முத்துச்சரம் , அலங்காரத்தில் பக்தர்கருக்கு சேவை சாதித்தார்.

அதனைத்தொடர்ந்து நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து தனுர் லக்னத்தில் புறப்பட்டு பகல் பத்தான அர்ஜூன மண்டபத்திற்கு சென்றடைந்தார் .அங்கு நம்பெருமாளுக்கு அரையர் சேவையுடன் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்று பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் எராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ரங்கா ரங்கா என கோஷமிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *