அகில இந்திய ஜோதிட பேரவை மற்றும் சமயபுரம் சொன்னது பலிக்கும் ஜோதிட நிலையம் இணைந்து நடத்தும் மாபெரும் ஜோதிடம் மற்றும் வாஸ்து முதல் மாநாடு திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ரவி மினியாலில் இன்று நடைபெற்றது.

இந்த முதல் மாநாட்டிற்கு அகில இந்திய ஜோதிட பேரவையின் செயல் தலைவர் ஹோரா மார்த்தாண்டம் ஸ்ரீ வீராட் விஷ்வ பிரம்மா அருட்செம்மல் டாக்டர் ஓம் உலகநாதன் தலைமை தாங்கினார். அஷ்டமங்கல பிரசன்ன சக்கரவர்த்தி டாக்டர் கனியர் ராஜசேகர் முன்னிலை வகித்தார். விழாவில் கலை ரத்னா தவத்திரு அறம் மிகு அடிகளார் கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்தார். மாநாட்டில் கௌரவ அழைப்பாளராக ஜோதிஷ வித்யா பீடம் சுவாமிஜி டாக்டர் ராஜேஷ் கண்ணா கலந்து கொண்டு மாநாட்டை சிறப்பித்தார்.

அகில இந்திய ஜோதிட பேரவை மற்றும் சமயபுரம் சொன்னது பலிக்கும் ஜோதிட நிலையம் இணைந்து நடத்திய மாபெரும் ஜோதிடம் மற்றும் வாஸ்து முதல் மாநாட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஜோதிடக் கலை மாமணிகள், ஜோதிட பேராசிரியர்கள், பரிகார செம்மல்கள், ஜோதிட கலா ரத்னா, வாஸ்து நிபுணர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மாநாட்டை சிறப்பித்தனர். இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகளை சொன்னது பலிக்கும் ஜோதிட நிலையத்தின் ஜோதிட பிரகாஸ்பதி சந்தான கிருஷ்ணன் செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *