திருச்சி மாநகர் மாவட்டம் அகில இந்திய முஸ்லிம் லீக் சார்பில் பாலக்கரை ரவுண்டானா பகுதியில் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ஐனுல்லமகுது தலைமையில் உத்தரகாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்லாமிய மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதலை தடுத்து நிறுத்த வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய முஸ்லிம் லீக் மாநில தலைவர் காஜா மொய்தீன், மாநில பொதுச் செயலாளர் ஜாவித் உசேன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் உத்தரகாண்ட், உத்தரகாசி ப்ரோல உள்ளிட்ட பகுதிகளில் லவ் ஜிகாத் என்ற போலி வதந்தியால்

இஸ்லாம் மக்களுடைய வீடுகள், கடைகள், இஸ்லாமிய மக்களை ஊரை விட்டு விரட்டிக் கொண்டு இருப்பதை கண்டித்தும், உடனடியாக மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு தடுத்து நிறுத்திட வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் உசேன் ஷெரிப், ராஜாமுகமது, ஷேக் அப்துல்லா, காஜா மொகிதீன், உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்