தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநில துணைத்தலைவரும், முன்னாள் திருச்சி பாராளுமன்ற உறுப்பினருமான எல்.அடைக்கல ராஜின் 11-ஆம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி திருச்சி ஜென்னி பிளாசாவில் உள்ள எல்.அடைக்கலராஜ் சிலைக்கு காலை 10.30 மணி அளவில் தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாக குழு உறுப்பினர் தொழிலதிபர் ஜோசப் லூயிஸ் அடைக்கலராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தொழிலதிபர்கள் ஜோசப் பிரான்சிஸ், வின்சென்ட் அடைக்கலராஜ் திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர்ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட தலைவர்கள் ஜெரோம் ஆரோக்கியராஜ், மற்றும் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் முக்கிய பிரமுகர்கள் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *