அம்பேத்கர் 67வதுநினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அரிஸ்டோ ரவுண்டானா அருகே உள்ள அண்ணல் அம்பேத்கரின் திருஉருவ சிலைக்கு மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகர செயலாளரும், மாநகராட்சி மேயருமான அன்பழகன் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வில் மண்டல குழு தலைவர் துர்கா தேவி, பகுதி செயலாளர்கள் மோகன் தாஸ்,போட்டோ கமால், இளங்கோ , வழக்கறிஞர் மணிவண்ண பாரதி மாமன்ற உறுப்பினர் ராமதாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்..

இதேபோல் டாக்டர் அம்பேத்கரின் 67வது நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி அரிஸ்டோ ரவுண்டானாவில் உள்ள அவரது திரு உருவ சிலைக்கு அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ஸ்ரீனிவாசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அருகில் மாவட்ட நிர்வாகிகள் மலைக்கோட்டை ஐயப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதேபோல் இந்திய நாட்டின் ஒடுக்கப்பட்டோரின் குரலாய் ஒழித்து அவர்களின் உரிமைக்காகவும் வாழ்நாளெல்லாம் பாடுபட்ட அறிவு சுடர் பாபா சாகிப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 67 வது நினைவு நாளை முன்னிட்டு அண்ணாரது திருவுருவச் சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது

 இதில் மாநில நிர்வாகிகள் ஜி கே முரளி, பேட்டரிக் ராஜ்குமார், மாமன்ற உறுப்பினர் சோபியா விமலராணி கோட்டத் தலைவர்கள் ஜங்ஷன் பிரியங்கா பட்டேல், மாவட்ட துணை அமைப்பின் தலைவர்கள் ஷீலா சேல்ஸ், உள்ளிட்ட திரளான காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *