பேரறிஞர் அண்ணாவின் 56வது நினைவு நாளை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திருச்சி மேலசிந்தாமணி பகுதியில் உள்ள அவரது திரு உருவ சிலைக்கு அமமுக திருச்சி தெற்கு மாவட்ட அவைத் தலைவர் ராமலிங்கம் தலைமையில் அமமுக கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர், மலைக்கோட்டை பகுதி செயலாளர் கமுருதீன் முன்னிலையில்
அமமுக தலைமைக் கழக நிலையைச் செயலாளர், திருச்சி வடக்கு மாவட்ட கழக செயலாளர் ராஜசேகரன், திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் செந்தில்நாதன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி செயலாளர்கள் &நிர்வாகிகள்,ஒன்றிய செயலாளர்கள் & நிர்வாகிகள், சார்பு அணி செயலாளர்கள் & நிர்வாகிகள், நகராட்சி செயலாளர்கள் & நிர்வாகிகள், பேரூராட்சி செயலாளர்கள் & நிர்வாகிகள், வட்ட செயலாளர்கள் & நிர்வாகிகள், ஊராட்சி செயலாளர்கள், கிளை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள கலந்து கொண்டனர்.