மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தோற்றுவித்து எம்ஜிஆர் மற்றும் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான மறைந்த ஜெயலலிதா ஆகியோர் போற்றி வளர்த்த மாபெரும் மக்கள் பேரியக்கமான அஇஅதிமுக 52-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அதனை முன்னிட்டு தமிழகம், புதுச்சேரி மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களில் உள்ள அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளில் அக்.17, 18, 26, 28 ஆகிய 4 நாட்கள் அதிமுக 52-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியீட்டு உள்ளார்.

அதன்படி அதிமுகவின் 52 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு திருச்சி மாநகர், மாவட்ட அ.தி.மு.க சார்பில் திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அதனைத் தொடர்ந்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்திற்கு மலர்துவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினர்.

இந்நிகழ்ச்சியில் அவைத்தலைவர் ஐயப்பன், மாவட்ட துணை செயலாளர்கள் வனிதா, பத்மநாதன்,ஜாக்குலின்,ஜெயலலிதா பேரவை செயலாளர் என்ஜினியர் கார்த்திகேயன், இளைஞர் அணி செயலாளர் முத்துக்குமார் , கவுன்சிலர்கள் கோ.கு.அம்பிகாபதி, அரவிந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்