அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 53 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு திருச்சி மாநகர், மாவட்ட அதிமுக சார்பில் நீதிமன்றம் அருகில் உள்ள எம்ஜிஆரின் திருவுருவ சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் துணை மேயரும், திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளருமான சீனிவாசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அருகில் அமைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி விழாவை கொண்டாடினர்.

இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கார்த்திகேயன்  ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர், கவுன்சிலர் அரவிந்தன், மாவட்ட இணைச் செயலாளர் ஜாக்லின், மாவட்ட மகளிர் அணி செயலாளர் நசீமா பாரிக், மாவட்ட மகளிர் அணி துணை தலைவி புவனேஸ்வரி ஐடி விங்ஸ் மாவட்ட செயலாளர் வெங்கட் பிரபு, திருச்சி மாநகர் மாவட்ட மாணவரணி துணைத் தலைவர் வழக்கறிஞர் சேது மாதவன், மாவட்ட மகளிர் அணி துணை தலைவி சபீனாபேகம் மீரான் மாவட்ட மகளிர் அணி தலைவி ஆரோக்கிய மேரி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் பிறகு அந்தந்த வார்டு பகுதிகளில் அதிமுக நிர்வாகிகள் கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்