அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமை கழக அறிவிப்பின்படி அதிமுக கழக பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான புரட்சித் தமிழர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் அறிவிப்பின்படி திருச்சி மாநகர் மாவட்ட 14 வது வார்டு மாம் என்ற உறுப்பினர் அரவிந்த் அவர்களை இன்று முதல் அதிமுக கழக புரட்சித் தலைவி பேரவை துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். அதன்படி அதிமுக கழக உடன்பிறப்புகள் கழக புரட்சித் தலைவி பேரவை துணைச் செயலாளர் அரவிந்த் எனக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.

அதன்படி முன்னாள் ஆவின் சேர்மனும், திருச்சி மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கார்த்திகேயன் அவர்களின் தம்பியுமான திருச்சி மாநகராட்சி 14வது வார்டு கவுன்சிலர் அரவிந்தன் தொடர்ந்து அதிமுக கழகத்தில் கட்சிப் பணியும் கவுன்சிலராக மக்கள் பணி சிறந்த முறையில் ஆற்றி வருகிறார். தற்போது புதிய கழக புரட்சித் தலைவி பேரவை துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள அரவிந்தனுக்கு அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் சால்வை அணிவித்து தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்