தமிழகத்தில் 2024 பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது இந்த பாராளுமன்ற தேர்தலில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் அதிலும் அனைத்தின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சார்பில் திருச்சி பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக கருப்பையா நிறுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில் திருச்சி மரக்கடை பகுதியில் உள்ள ஏ எம் கே மஹாலில் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக மூத்த நிர்வாகிகளிடம் திருச்சி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் கருப்பையா ஆதரவு கோரினார்.

இதில் முன்னாள் அரசு தலைமை கொறடா மனோகரன் முன்னாள் அமைச்சர் வளர்மதி முன்னாள் எம்பி இரத்தினவேல் ஆவின் முன்னாள் சேர்மன் கார்த்திகேயன் மாமன்ற உறுப்பினர்கள் அரவிந்த் அம்பிகாபதி, ஐடி விங்ஸ் மாவட்ட செயலாளர் வெங்கட் பிரபு  திருச்சி மாநகர் மாவட்ட மாணவரணி துணைத் தலைவர் வழக்கறிஞர் சேது மாதவன் திருச்சி மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் ஜெயஸ்ரீ மற்றும் அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *