திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க செயலாளராக முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசனை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அதனைத் தொடர்ந்து அதிமுக திருச்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார். தொடர்ந்து இன்று காலை நிர்வாகிகளுடன் சென்று மாவட்ட செயலாளர் சீனிவாசன் திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மேலும் திருச்சி சிந்தாமணியில் உள்ள அண்ணா சிலைக்கும், மரக்கடையில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இந்நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், அவைத்தலைவர் ஐயப்பன், மாவட்ட துணை செயலாளர்கள் வனிதா, பத்மநாதன்,ஜெயலலிதா பேரவை செயலாளர் கார்த்திகேயன்,

இளைஞர் அணி செயலாளர் முத்துக்குமார்,பகுதி செயலாளர்கள் அன்பழகன்,பூபதி, சுரேஷ்குப்தா,எம்.ஆர்.ஆர்.முஸ்தபா, நாகநாதர் பாண்டி, கலைவாணன், கவுன்சிலர்கள் கோ.கு.அம்பிகாபதி, அரவிந்தன்,முன்னாள் கோட்டத் தலைவர் ஞானசேகர், நிர்வாகிகள் இன்ஜினியர் இப்ராம் ஷா மற்றும் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *