அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் மறைந்த தமிழக முதலமைச்சரும், நடிகருமான எம்.ஜி.ஆர் அவர்களும் மறைந்த தமிழக முதலமைச்சரும் நடிகையுமான ஜெயலலிதா அவர்களும் இணைந்து நடித்த பிரம்மாண்ட திரைப்படமான

“ஆயிரத்தில் ஒருவன்” திரைப்படம் தில்லைநகர் பகுதி கழக செயலாளர் எம்.ஆர்.ஆர் முஸ்தபா மற்றும் காந்தி மார்க்கெட் பகுதி கழக செயலாளர் சுரேஷ் குப்தா ஆகியோர் தலைமையில் எம்ஜிஆர் அம்மா ரசிகர்களுக்காக திருச்சி பேலஸ் தியேட்டரில் சிறப்புக் காட்சி இன்று வெளியிடப்பட்டது.

மேலும் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தை காண வந்த ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சிறப்பு கூப்பன் வழங்கப்பட்டது இந்த கூப்பனில் குழுக்கள் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் 2 நபர்களுக்கு

தங்க காயினும் 100 நபர்களுக்கு சில்வர் குடங்களை அதிமுக தில்லைநகர் பகுதி செயலாளர் எம் ஆர் முஸ்தபா குழுக்களில் தேர்ந்தெடுக்க பட்டவர்களுக்கு வழங்கினார். முன்னதாக இந்த சிறப்பு காட்சியை காண வந்த ரசிகர்கள் சூடம் ஏற்றி நடனமாடி திரைப்படத்தை கண்டு ரசித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *