அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில், வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி தலைமையில், திருச்சி தில்லைநகர் பகுதியில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதில், அதிமுக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் ஆணைக்கிணங்க,

வருகிற 24 ஆம் தேதி திங்கட்கிழமை காலை 10 மணி அளவில் திருச்சி மாவட்ட ஆட்சியரகம் அருகில், தமிழ்நாட்டில் கள்ளச்சாராய புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்தும், கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி பலர் பலியான சம்பவத்திற்கு தார்மீக பொறுப்பேற்று, சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தவறிய திமுக அரசின் தலைமையிலான தமிழக முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தியும்,

ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும், அதில் திருச்சி மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்வது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, பூனாட்சி, அமைப்புச் செயலாளர் மனோகரன், முன்னாள் எம்எல்ஏ இந்திரா காந்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்