மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பொறுப்பேற்றவர் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த மரியம் பிச்சை. இவர் திருச்சி மேற்குத் தொகுதியில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு விழா சட்டசபையில் நடைபெறுவதையொட்டி அதில் பங்கேற்பதற்காக அமைச்சர் மரியம் பிச்சை சென்னை நோக்கி காரில் சென்ற போது விபத்தில் மரணம் அடைந்தார்.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் மரியம் பிச்சையின் 12 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது படத்திற்கு அவரது மகனும், அதிமுக முன்னால் மாநகராட்சி துணை மேயருமான ஆஷிக் மீரா தலைமையில் அதிமுக நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்