மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தோற்றுவித்த எம்ஜிஆர் மற்றும் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான மறைந்த ஜெயலலிதா ஆகியோர் போற்றி வளர்த்த மாபெரும் மக்கள் பேரியக்கமான அஇஅதிமுக 52-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அதனை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட ஓபிஎஸ் அணி சார்பில்

அதிமுகவின் 52 ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி அவைத்தலைவர் வக்கீல் ராஜ்குமார் தலைமையில் ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் வெல்லமண்டி ஜவஹர்லால் நேரு முன்னிலையில் திருச்சி கோர்ட் அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து எம்ஜிஆர் சிலை அருகே அமைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் முதல்வரும் அதிமுகவின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

 மேலும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இந்நிகழ்வில் பொருளாளர் மனோகர், நிர்வாகிகள் பத்மாவதி, வசந்தி, ஷாஜகான், கார்த்திகேயன், பால்ராஜ், சந்திரன், ராஜேந்திரன், கணேசன், சந்துரு உள்பட பலர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்