திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் திருநெடுங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட சோலகம் பட்டியில் வசிக்கும் 800 குடும்பத்தினர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி கடந்த 2020 முதல் மனு அளித்து வருகிறோம். இது குறித்து தாசில்தார், மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் அமைச்சர் கே.என்.நேருவிடம் மனு அளித்துள்ளோம்.

ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த மூன்று வருடங்களாக இலவச வீட்டு மனை பட்டாவிற்காக அலைந்து வருகிறோம் என கூறி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அப்பகுதி பொதுமக்கள் மனு அளிக்க வந்திருந்தனர்.


அப்பொழுது 2020 முதல் அளிக்கப்பட்ட மனுக்களை மூட்டையில் கட்டி அதற்கு மாலை அணிவித்து தலையில் சுமந்தபடி, மேளம் அடித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர். மாவட்ட ஆட்சியரகத்தில் மனுக்களைப் பாடை கட்டி மேல மடித்து பொதுமக்கள் வந்த நிகழ்வு சிறிது நேரம் பரபரப்பு ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *