திருச்சி தெற்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக கிழக்கு மாநகரம் அரியமங்கலம் பகுதி திமுக அனைத்து அணிகளை சேர்ந்த அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு திமுக திருச்சி தெற்கு மாவட்ட அரியமங்கலம் பகுதி கழக செயலாளர் ஏ.எம்.ஜி விஜயகுமார் தலைமை தாங்கினார். திமுக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் தினகரன் முன்னிலை வகித்தார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அரியமங்கலம் பகுதி கழக செயலாளர் ஏ.எம்.ஜி விஜயகுமார் பேசுகையில்:-

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் வருகிற 14ம் தேதி திருச்சி குடமுருட்டி பகுதியில் 100அடி உயரத்தில் திராவிட முன்னேற்றக் கழக கட்சி கொடியை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் ஏற்றி வைக்க உள்ளார். இந்நிகழ்ச்சியில் திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாநகர செயலாளர் மதிவாணன் ‌ மற்றும் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொள்ள வேண்டும்.

அதனைத் தொடர்ந்து கலைஞர் அறிவாலயத்தில் திருவெரும்பூர் மணப்பாறை கிழக்கு தொகுதிகளை சேர்ந்த பேரூர் கழக செயலாளர் ஒன்றிய கழக செயலாளர், நிர்வாகிகள் அணி அமைப்பாளர் துணை அமைப்பாளர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது இந்த கூட்டத்திற்கு அனைவரும் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *