அருந்தமிழ் கல்விக் கூடத்தின் முதலாம் ஆண்டு விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஹோட்டல் அருண் கூட்ட அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு அருந்தமிழ் கல்வி கூடத்தில் நிறுவனர் அண்ணாதுரை தலைமை தாங்கினார் அருண் தமிழ் கல்விக்கூடத்தின் செயலாளர் செல்வராஜன் வரவேற்புரை ஆற்றினார்.
விழாவில் துணிந்திடு மனமே கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது முதல் நூலை இந்திரா கணேசன் இன்ஸ்டியூட் ராஜசேகரன் வெளியிட மதுரை பி டி ஆர் பொறியியல் கல்லூரி நிறுவனர் முனைவர் தனவேலன் பெற்றுக் கொண்டார். துணிந்திடு மனமே நூலாசிரியர் கவித்தென்றல் ஜெயா செல்வராஜன் அனைவரையும் வரவேற்று சிறப்புரையாற்றினார். இறுதியாக அருந்தமிழ் கல்வி கூடத்தின் முதலாம் ஆண்டுயொட்டி நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கேக் வெட்டி வெகு விமர்சையாக கொண்டாடினர்.