திருச்சி மாவட்டம் தாராநல்லூர் வீரமா நகரம் பொது தெரு பகுதியில் உள்ள அருள்மிகு ஜெய ஜெய ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் திருக்கோவில் வருகிற ஜனவரி 22ஆம் தேதி புனராவர்த்தன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.

மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று சந்தை நண்பர்கள் குழு சார்பில் மாபெரும் அன்னதானம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது இதில் அரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் இந்த மகா கும்பாபிஷேக விழாவிற்காக திருச்சி காவேரி ஆறு அம்மா மண்டபம் படித்துறையில் இருந்து புனித நீர் தீர்த்த குடம் மூலம் கொண்டுவரப்பட்டு இன்று முதலாம் யாகசாலை பூஜையும், சனிக்கிழமை நாளை இரண்டாம் யாக சாலை பூஜையும் ஞாயிற்றுக்கிழமை மூன்றாம் யாகசாலை பூஜையும் நடைபெற்று 22 ஆம் தேதி மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது இதற்கு பக்தர் கோடிகள் அனைவரும் வருகை தர வேண்டுமென விழா குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *