திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க செயலாளராக முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசனை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் புதிய மாவட்ட செயலாளர் சீனிவாசனுக்கு வாழ்த்து தெரிவித்து திருச்சி மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் சுவர் விளம்பரங்கள் விரைந்தனர் .

இந்நிலையில் திருச்சி ஏர்போர்ட் பகுதி அதிமுக செயலாளர் ஏர்போர்ட் விஜி திருச்சி விமான நிலைய காவல் நிலையத்திற்கு எதிரே உள்ள சுவரில் மாவட்டச் செயலாளரை வாழ்த்தி நேற்று ஒரு சுவர் விளம்பரம் செய்தார். இந்த சுவர் விளம்பரத்தை நள்ளிரவு மர்ம நபர்கள் தார் ஊற்றி அழித்தனர். இது பற்றி தகவல் அறிந்த அதிமுகவினர் அங்கு திரண்டனர். பின்னர் குற்றவாளிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தி காவல் நிலையம் முன்பு திருச்சி -புதுக்கோட்டை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.பின்னர் அவர்கள் ஏர்போர்ட் விஜி தலைமையில் திருச்சி ஏர்போர்ட் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு புகார் மனு அளித்தனர். அதில் சுவர் விளம்பரத்தை அழித்த மர்ம நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. அதிமுகவினரின் திடீர் போராட்டத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்