திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகே உள்ள இ. ஆர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது இப்பள்ளியில் உள்ள 30 ஆசிரியர்கள் மற்றும் 10 அலுவலக பணியாளர்கள் என மொத்தம் 40 பேருக்கு மாதம் மாதம் 22,000 முதல் ஒரு லட்சத்து 35 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்பட்டு வந்தது ஆனால் கடந்த மே மற்றும் ஜூன் மாதம் ஆகிய இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர் மற்றும் திருச்சி மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோரிடம் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை மேலும் தமிழக முதலமைச்சரின் தனி பிரிவிற்கு மனு அளித்தும் தற்போது வரை ஊதிய வழங்கப்படாததால் இன்று மாலை இ.ஆர் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் உள்ளிட்டோர் தனியார் பள்ளி ஆசிரியர் கழகத்தின் நிறுவனத் தலைவர் திருமாவளவன் தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள திருச்சி மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட வந்தனர். அவர்களுடன் திருச்சி மாவட்ட கல்வி அலுவலர் சங்கரநாராயணன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து தனியார் பள்ளி ஆசிரியர் கழகத்தின் நிறுவன தலைவர் திருமாவளவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- கடந்த இரண்டு மாதங்களாக இ.ஆர் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர். எங்கள் நிலையை அரசுக்கு தெரிவித்து உள்ளோம் ஆனாலும் தற்போது வரை அரசு எங்கள் கோரிக்கைக்கு நிறைவேற்றாமல் தூங்கிக் கொண்டு இருக்கிறது. இந்த அரசாங்கம் அக்கறையற்ற அரசாங்கமாக இருக்கிறது. மேலும் திருச்சி மாவட்ட கல்வி அலுவலர் சங்கரநாராயணன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். அதில் நீதிமன்ற பதிலுக்காக இரண்டு நாள் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.  இதற்குப் பிறகும் எங்களுக்கு சம்பளம் வரவில்லை என்றால் இரண்டு நாட்களுக்குப் பிறகு மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்