ஆடிப்பெருக்கு திருநாள். ஏன் கொண்டாடுகிறோம்? ஆடி மாதம் 18ஆம் தேதியான இன்று ஆடிப்பெருக்கு. இதனை பதினெட்டாம் பெருக்கு என கூறுவதுண்டு. மழைக்காலத்தின் துவக்கமான ஆடி மாதத்தில் காவிரியில் நீர் பெருகி வரும் நாளையே ஆடிப்பெருக்கு நாளாக கொண்டாடுகிறோம். இந்நாளில் விவசாயிகள் புதிய விதை விதைத்து உழவுப் பணிகளை துவங்குவார்கள். மக்கள் யாவரும் காவிரி அன்னையை வேண்டி, ஆற்றங்கரையிலும், குளக்கரைகளிலும் சிறப்பு வழிபாடு செய்வார்கள் மேலும் நீர்நிலைகளுக்கு செல்ல இயலாதவர்கள் வீட்டிலேயே பொங்கல் வைத்து வழிபடுவார்கள்.இவ்வாறு நாம் வழிபடும் ஆடிப்பெருக்கு நாளை ஏன் ஆடி 18ஆம் தேதி கொண்டாடுகிறோம்.

மேலும் புதுமண தம்பதிகள் தங்கள் திருமண நாளில் அணிந்திருந்த மாலைகளை காவிரி ஆற்றில் விட்ட பின்பு காவிரி தாயை வணங்கி புதிய தாலி கயிற்றை மாற்றிக் கொள்ளும் வைபவம் நடைபெறும். இன்று ஆடி பதினெட்டாம் நாளின் ஒரு பகுதியாக மக்கள் கொண்டாடி வருகின்றனர். இன்று ஆடிப்பெருக்கு முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் ஏராளமான பொதுமக்கள் காவிரி ஆற்றில் தேங்காய் பழம், வாழை இலையில் அரிசி வைத்து படையல் இட்டு பூ, பழம் , வெற்றிலை , தீபம் ஏற்றி, காவிரி தாய்க்கு சூடம் காட்டி காவிரித் தாயை வணங்கினர்.

இதே போல் புதுமண தம்பதிகளும் புதிய தாலி கயிறு மாற்றி காவிரித்தாயை வழிபட்டனர். திருமணமாகாத பெண்கள் மஞ்சள் கயிறு அணிந்து , கையில் மஞ்சள் கயிறு கட்டியும் காவிரி தாயை வணங்கினர். இந்த வருடம் திருச்சி காவிரி ஆற்றில் சுமார் 10,000 கன அடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் உற்சாகத்துடன் ஆடி 18 கொண்டாடி வருகின்றனர்.‌ ஆடி 18 விழாவை முன்னிட்டு எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாதவாறு மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பொது மக்களின் பாதுகாப்பு கருத்தில் கொண்டு தீயணைப்பு துறையினர், மருத்துவ பணியாளர்கள் பாதுகாப்பு பணி ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்