ஆண்டுதோறும் ஆடி மாதம் 18ஆம் நாள் காவிரி கரையோர மாவட்டங்களில் நடைபெறும் ஆடிப்பெருக்கு விழாவில் காவிரி அன்னைக்கு பூஜைகள் நடத்தி வழிபாடு செய்யப்படுகிறது.அந்த வகையில் உலக நன்மைக்காகவும், காவிரியில் நீர் வற்றாமல் இருப்பதற்காக காவிரி தாய்க்கு சீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த சிறப்பு பூஜை செய்வதற்காக விசுவ ஹிந்து பரிச்சத் அமைப்பின் மகளிர் அணியின் சார்பில் பூக்கள், பால், சந்தனம், பழங்கள், காய்கறிகள், நவதானியங்கள், மஞ்சள், குங்குமம், பட்டுப்புடவை, வளையல் உள்ளிட்ட 150 வகையான சீர் வரிசை பொருட்களை பெண்கள் தட்டில் வைத்து ஏந்தியவாறு திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள அன்னதானம் சமாஜம் முன்பு இருந்து ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

பின்னர் பூஜை செய்யப்பட்டு சீர் வரிசை பொருட்களை காவிரி ஆற்றில் விடப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட மகளிர் அணி பொறுப்பாளர் திருமதி ஜெயந்தி தலைமையில் மாநில இளைஞர் அணி பொறுப்பாளர் ஆனந்த், கோட்ட சரசங்க பொறுப்பாளர் பிரபாவதி, மாவட்ட செயலாளர் என் ஆர் சீனிவாசன், மாவட்ட இணை செயலாளர் அழகு யுவராஜ், மலைக்கோட்டை ப்ரகண்ட தலைவர் செந்தில்நாதன், ப்ரகண்ட செயலாளர் சுந்தரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்