புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி சார்பில், பு.ஜ.தோ.மு நிர்வாகியும் ஆட்டோ ஓட்டுநருமான பிரதீப் என்பவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய போலீசாரை கைது செய்ய வேண்டும் தாக்குதலுக்கு பயன்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும்,

அச்சமின்றி தொழில் செய்வதற்கு ஆட்டோ ஓட்டுனர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத்தினர் பேரணியாக நடந்து வந்து திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 இது குறித்த தகவல் இருந்து வந்த உதவி கமிஷனர் கென்னடி ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்பு சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் இது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார் அதனைத் தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத்தினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *