இந்தியாவில் வாக்குத் திருட்டு விழிப்புணர்வு கையெழுத்து இயக்க பணிகள் குறித்து காங்கிரஸ் நிர்வாகிகள் ஆய்வு கூட்டம் திருச்சி அருணாச்சலம் மன்றத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரெக்ஸ், திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருச்சி கலை, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கோவிந்தராஜ் ஆகியோர் தலைமை தாங்கினார்கள் கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:- வாக்குத்திருட்டு குறித்து பொதுமக்களிடம் விளக்கி கூறி கையெழுத்து இயக்கத்தை நாடு முழுவதும் நடத்தி வருகிறோம், தமிழகத்தில் ஒரு கோடி பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்த ஏற்பாடு செய்து வருகிறோம்.சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் கூட்டணி குறித்து யாரும் கருத்து கூற வேண்டாம்.
திமுக காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் ஏதாவது கருத்து கூறி கூட்டணிக்குள் நெருடல் ஏற்படுத்தி விடக்கூடாது. கூட்டணியில் யார் வருவார்கள். இருப்பார்கள் என்பது குறித்து டெல்லி மேலிடம் பார்த்துக் கொள்ளும்.நாம் பேசுவதை விட்டுவிட்டு செயலில் ஈடுபட வேண்டும். சட்டமன்றத் தேர்தலுக்கு குறுகிய காலமே இருக்கும் நிலையில் தமிழக முழுவதும் பூத் கமிட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.பூத் கமிட்டி அமைத்து விட்டால் தேர்தலில் 60 சதவீதம் பணிகள் முடிந்த மாதிரி ஆகும்.ஒரு கூட்டத்தில் கொடியை காட்டிவிட்டால் கூட்டணி உருவாகி விடுமா.இது சில விஷமிகள் செய்யும் வேலையாகும். கரூர் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அது பற்றி மேலும் கருத்து கூற விரும்பவில்லை. உச்சநீதிமன்றம் முன்பு நடைபெற்ற விபத்து சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் திருமாவளவன் போன்ற அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.
பிறகு திருச்சி அருணாச்சலம் மன்றத்தின் வெளியே பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் வாங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் ரெக்ஸ், திருச்சி கலை, வழக்கறிஞர் கோவிந்தராஜ், பென்னட், மாநகராட்சி கவுன்சிலர் சோபியா விமலா ராணி, பொருளாளர் முரளி, ஐ.டி. பிரிவு லோகேஷ், அரிசி கடை டேவிட், இளைஞர் காங்கிரஸ் விஜய் பட்டேல், கோட்டத் தலைவர்கள் பிரியங்கா பட்டேல், வெங்கடேஷ் காந்தி, அழகர், மலர் வெங்கடேசன், பாக்கியராஜ், பகதூர்ஷா, மாவட்டச் செயலாளர்கள் பூக்கடை பன்னீர்செல்வம், உறந்தை செல்வம், மனித உரிமை துறை ஆறுமுகம், ராகவேந்திரா, மகளிர் அணி ஷீலா செலஸ், அஞ்சு, அமைப்புசாரா அணி மகேந்திரன், ஆராய்ச்சி பிரிவு தலைவர் பாண்டியன், கலைப்பிரிவு அருள், பத்மநாபன், மாரீஸ்வரி, கிளமெண்ட், வார்டு தலைவர் விஜயலட்சுமி மற்றும் வடக்கு தெற்கு மாவட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.