இந்திய சுதந்திரப் போராட்ட வீரர், செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழர் வ.உ..சிதம்பரனாரின் 154 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் எதிரில் உள்ள அவரது முழு உருவ சிலைக்கு மதிமுக சார்பில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துறை வைகோ அவர்கள் வ உ சியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அருகில் மாநில துணை பொதுச் செயலாளர் ரொகையா, மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, டி.டி.சி. சேரன், மணவை தமிழ்மாணிக்கம், தமிழக வெள்ளாளர் முன்னேற்ற கழக மாநில தலைவர் ஆர். வி.ஹரிஹரூன் பிள்ளை மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.