திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள அருள்மிகு மாரியம்மன் கோவில் அம்மன் தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவில் எழுந்தருளுவதற்கு முன்பு மாரியம்மன் இனாம் சமயபுரத்தில் கோவிலில் குடிகொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இதனால் அங்குள்ள கோவில் ஆதி மாரியம்மன் கோவில் என அழைக்கப்படுகிறது. சமயபுரம் மாரியம்மனின் அன்னையாகவும் தெற்கிலிருந்து தன் கடைக்கண் அருள் பார்வை கிழக்கில் உள்ள தன் மகளான சமயபுரம் மாரியம்மன் நோக்கி தான் ஆதி மாரியம்மன் காட்சி பெறுகிறார். இக் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதா தேரோட்டத்தை முன்னிட்டு தை மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை மீன லக்னத்தில் பூச்சொரிதல் விழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

 அதன்படி இந்த ஆண்டுக்கான பூச்சொரிதல் விழா இன்று தொடங்கியது. இதையொட்டி காலையில் கோவில் நிர்வாகத்தின் சார்பாக கோயில் இணை ஆணையர் கல்யாணி,தலைமையில் கோவில் அலுவலக பணியாளர்கள், ஊழியர்கள், பக்தர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் பூத்தட்டுகளை சுமந்து தேரோடும் வீதி வழியாக கோவிலுக்கு வந்தனர். முன்னதாக பூத்தட்டுகளுக்கு கோவில் குருக்கள் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்தார்.இதையடுத்து ஆதி மாரியம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு பூக்களை சாற்றி பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சமயபுரம், மருதூர், மாகாளிகுடி, வி.துறையூர் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் இருந்து தட்டுகள் மற்றும் வாகனங்கள் உள்ளிட்டவற்றில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கொண்டு வந்த பூக்கள் அம்மனுக்கு சாற்றப்பட்டது.

 இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர்.வருகின்ற 18 ந்தேதி 2 வது வார பூச்சொரிதல் விழாவும்,25 ந்தேதி 3 வது வார பூச்சொரிதல் விழாவும் நடைபெற உள்ளது. முக்கிய நிகழ்வான மாசிமாத தேரோட்ட விழா வருகின்ற மார்ச் 3 ந்தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் கோயில் பணியாளர்கள், கோயில் குருக்கள் ஜம்புலிங்கம்,மணியக்காரர் பழனிவேல்,பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *