திருச்சி மன்னார்புரம் பகுதியில் உள்ள மின்சார அலுவலகத்தில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு திருச்சி பெருநகர் வட்டம் & GCC வட்டம், சார்பாக மாநில தழுவிய தர்ணா ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் ரெங்கராஜன் தலைமைதாங்கினார்.

மின்வாரியத்தில் ஒப்பந்தத்திற்கு மாறாக ஈ டெண்டர் முறையில் ஊழியர்களை நியமிப்பதை ரத்து செய்திடுக, ஈ டெண்டரை ரத்து செய்து மின்வாரியத்தில் 15 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு வாரியமே தினக்கூலி வழங்கி நிரந்தரம் செய்திடுக, காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பக, அவுட்சோர்சிங் முறையை கைவிடுக, ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிடுக, மின் வாரியம் நஷ்டம் என காரணம் காட்டி மின்வாரியத்தை பல தூண்டுகளாக பிரித்து வாரிய கட்டமைப்பை சீரழிக்காதே,

10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் திமுக , ஆட்சி பொறுப்பேற்றவுடன் நிரந்தரம் செய்யப்படுவார்கள் என முதல்வர் அறிவித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்று உள்ளிட்ட கோரிக்கையை முன் வைத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் உடனடியாக எங்கள் கோர்க்கையை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும் என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்