கோமாதா’ என்று அழைக்கப்படும் பசுவை வழிபடுவதால் பல நன்மைகள் நடைபெறுகிறது. மேலும்பசுவின் உடலில் மும்மூர்த்திகளும், முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்து எட்டாயிரம் ரிஷிகளும் இருக்கிறார்கள். பசுவிற்கு உணவளித்தால் நமது தர்ம வினைகள், சாபங்கள் நீங்கும் என்பது ஐதீகம் இந்நிலையில் இன்று திருச்சி செடல் மாரியம்மன் கோவில் திடலில் தமிழ்நாடு வீர விவேகானந்தர் இளைஞர் பேரவை சார்பில் வரலட்சுமி நோன்பை முன்னிட்டு 9 ஆண்டு மாபெரும் கோ பூஜை நடைபெற்று.

உலக நன்மை வேண்டியும், சகல ஐஸ்வர்யங்களும் வழங்கும் இந்த கோ பூஜை விழாவை சிவஸ்ரீ காமாட்சி தாசர் ஸ்ரீ ஸ்ரீ பிரம்மானந்த சரஸ்வதி சுவாமிகள் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் பசு மாடு மற்றும் கன்று ஆகியவற்றிற்கு சிறப்பு பூஜை நடைபெற்றது இதில் திருச்சி மாவட்டம் முழுவதும் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு பசு மற்றும் கன்றுக்கு பூஜை செய்து தீபாராதனை காண்பித்தனர் மேலும் பழம் , அகத்தி கீரை ஆகியவற்றை வழங்கினார்அ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்