திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே உள்ள ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோவிலில் ஸ்ரீ அனுமன் ஜெயந்தி மஹோத்ஸவ. விழாவின் முதல் நாளான இன்று உலக நன்மைக்காகவும் சகல கிரக தோஷ நிவர்த்திக்காகவும் ஸ்ரீ மகா சுதர்சன ஹோமம் இன்று நடைபெற்றது மேலும் நாளை 10ம் தேதி ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேய சுவாமிக்கு 10008 ஜாங்கிரி மாலை சாற்றுப்படி வைபவம் நடைபெறுகிறது.

 அதனைத் தொடர்ந்து பதினோராம் தேதி சிறப்பு அலங்காரத்துடன் ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர் சுவாமிக்கு 10008 வடமாலை சாற்றுப்படி வைபவம் நடைபெறுகிறது முன்னதாக இன்று நடந்த ஸ்ரீ மகா சுதர்சன ஹோமத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் மேலும் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பரம்பரை அர்ச்சகர் சுரேஷ் என்கிற செந்தாமரைக்கண்ணன் திருக்கோவில் நிர்வாகிகள் கோபாலகிருஷ்ணன் கண்ணையன் மற்றும் ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர் அன்னதான கமிட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்