திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகள் மற்றும் தோட்டக்கலை விற்பனை நிலையம் மூலமாக வெளி சந்தைகளை விட குறைவான விலையில் தக்காளி விற்பனை செய்யப்படுவதை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் தமிழ்நாடு அரசின் சீரிய நடவடிக்கையின் காரணமாக வெளி சந்தையில் அதிக விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்படுவதை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இ-சந்தை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து விவசாயிகளிடமிருந்து தக்காளி நேரடி கொள்முதல் செய்யப்பட்டு

அண்ணாநகர், கே.கே.நகர் உழவர் சந்தைகளிலும் மன்னார்புரம், மாவட்ட ஆட்சியர் வளாகம் மற்றும் தோட்டக்கலை விற்பனை நிலையம், திருவானைக்கோவில் ஆகிய இடங்களிலும் விற்பனை செய்யப்படவுள்ளது. எனவே பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த வாய்ப்பினை பயன்படுத்தி குறைந்த விலையில் தக்காளி வாங்கி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்