திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பயிலும் உடற்கல்வி மற்றும் விளையாட்டு அறிவியலின் பி ஜி மற்றும் ஆராய்ச்சி துறை மாணவ மாணவிகளுக்கு உதவும் வகையிலும், அதேபோல் விளையாட்டுத் திறன் கொண்ட மாணவர்களை ஊக்கப்படுத்தவும், மேலும் மாவட்ட மாநில அளவில் நடைபெறும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்பதற்காக செல்லும் விளையாட்டு வீரர்களுக்கு உதவும் வகையில்

 எக்ஸெல் குழுமத்தின் சார்பில் பல லட்சம் மதிப்புள்ள சொகுசு பேருந்தை எக்ஸெல் குழுமத்தின் சேர்மன் முருகானந்தம் தனியார் கல்லூரிக்கு இன்று வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு தேசிய கல்லூரியின் முதல்வர் டாக்டர் குமார் தலைமை தாங்கிட தேசிய கல்லூரியின் செயலாளர் ஸ்ரீ ரகுநாதன் முன்னிலை வகித்தார். மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்