எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் தமிழ்ப்பேராயம், எஸ்.ஆர்.எம். கல்வி குழும்த்தின் நிறுவனர் வேந்தர் டாக்டர் பாரிவேந்தர் அவர்களால் 2010 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை தமிழ்ப்பேராயம் தலைசிறந்த எண்ணற்ற தமிழ்ப்பணிகளை ஆற்றிவருகிறது. தமிழ் அருட்சுனைஞர் சான்றிதழ் படிப்பு, வள்ளலார் சான்றிதழ் படிப்பு முதலானவற்றோடு பல இலட்சம் மதிப்பிலான தமிழ்ப்பேராய விருதுகள் வழங்குதல், அரிய நூல்களை வெளியிடுதல், பன்னாட்டு, தேசிய மாநாடுகளை ஒருங்கிணைத்தல் எனப் பல்வேறு சிறந்த பணிகளை ஆற்றிவருகிறது. தமிழ்ப்பேராயம் வழி மாணவர்களின் ஆற்றலை வெளிப்படுத்த பல ஆயிரம் மாணவர்களைக் கொண்ட பாரிவேந்தர் மாணவர் தமிழ் மன்றம் செயல்பட்டு வருகிறது.
அரும்பணிகள் பல ஆற்றிவரும் தமிழ்ப்பேராயம் இதன் தொடர்ச்சியாக கல்லூரி மாணவர்களுக்கான பேச்சாற்றலை அங்கீகரிக்கும் நோக்கத்தில் சொல் தமிழா சொல் 2025 என்னும் தலைப்பில் மிகப் பிரம்மாண்டமான பேச்சுப்போட்டியை தற்போது ஏற்பாடு செய்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை உள்ளடக்கி 9 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு இப்பேச்சுப்போட்டி பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பட்டு வருகிறது. 4வது மண்டலத்திற்கான பேச்சுப் போட்டி திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் 16,02,2025 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. 350க்கும் மேற்பட்ட மாணவர்கள், 6 நடுவர்கள் என மிகப்பிரம்மாண்டமாக திருச்சி மண்டலப் போட்டி நடைபெற்றது. பல சுற்றுகளாக நடைபெற்றது .
இப்போட்டிகளில் வெற்றிபெற்றவர்களின் விவரம் பின்வருமாறு: முதல் பரிசு – Rs. 1,00.000 – வை. வைஜெயந்தி, மீனாட்சி இராமசாமி பொறியியல் கல்லூரி, அரியலூர். இரண்டாம் பரிசு – Rs. 75,000 – ச. ஆஷிக் டோனி, சென்ட் ஜோசப் கல்லூரி, திருச்சி மூன்றாம் பரிசு – Rs. 50,000 – த. கிஷோர், எம் குமாரசுவாமி பொறியியல் கல்லூரி, கருர் இப்போட்டியில் வெற்றி பெற்றோருக்குச் சான்றிதழ்களை கரு. நாகராசன், தலைவர், தமிழ்ப்பேராயம் அவர்கள் வழங்கிச் சிறப்பித்தார். வெற்றியாளர்களில் முதல் நால்வர் மாநில அளவிலான இறுதிப்போட்டியில் பங்கேற்கத் தகுதிபெறுவர். போட்டிகளில் வென்றோருக்கான பரிசுத்தொகை மாநில அளவிலான இறுதிப்போட்டி அன்று வழங்கப்படும்.