திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று ஷார்ஜாவில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது பயணி ஒருவர் தனது சூட்கேசில் உள்ள ஸ்குருகளை தங்கத்தில் செய்து அதற்கு நிக்கல் கோட்டிங் செய்து கடத்தி வந்தது தெரியவந்தது.

கடத்தி வரப்பட்ட தங்கத்தின் எடை 186 கிராம் அதன் இந்திய ரூபாய் மதிப்பு 11 லட்சத்து 16 ஆயிரம் ஆகும். பின்னர் அந்த பயணியை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்