சர்வதேச திருச்சி விமான நிலையத்திற்கு பல்வேறு வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்படுகிறது. இவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் பயணிக்கும் பயணிகளில் சிலர் தங்கம் கடத்துவது வாடிக்கையாக உள்ளது. இந்த நிலையில், இன்று சிங்கப்பூரிலிருந்து ஸ்கூட் விமானம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தது. இந்த விமான பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்குத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த ஆண் பயணி ஒருவரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது. அவர் தொடைகளில் மறைத்து வைத்திருந்த பேஸ்ட் வடிவிலான தங்கத்தை மீட்டனர். 1.605 கிலோ எடையுள்ள இந்த தங்கத்தின் மதிப்பு ரூபாய் 1.16 கோடி என தெரியவந்துள்ளது. தங்கத்தை கடத்தி வந்த ஆண் பயணியிடம் திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்குத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்